coping with Patient death
இலங்கைசெய்திகள்

12 வயது சிறுமியால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்

Share

12 வயது சிறுமியால் தாக்கப்பட்ட சிறுவன் மரணம்

விளையாடிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் சிறுமி ஒருவரால் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட சிறுவன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களான இரண்டு சிறார்களும் விளையாடிக் கொண்டிந்த சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

இச்சம்பவம் கடந்த 4 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. காயமடைந்த குறித்த சிறுவன் நீர்கொழும்பு வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (07.07.2023) உயிரிழந்துள்ளார்.

குறித்த சந்தர்ப்பத்தில் 12 வயதான சிறுமி ஒருவரால் 10 வயதான சிறுவனின் நெற்றிப் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தாக்குதலை மேற்கொண்ட 12 வயதான சிறுமியைக் கைது செய்து நீர்கொழும்பு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதன் பின்னர் பாதுகாப்புக் காரணமாக சிறுவர் நிலையமொன்றில் தடுத்து வைத்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியின் தாய் வெளிநாட்டில் உள்ளார் எனவும், அவரது தந்தை வேறு திருமணம் முடித்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...