gmoa
இலங்கைசெய்திகள்

வேலைநிறுத்தத்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படாது!!

Share

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் அடையாள வேலை நிறுத்தத்தால்  நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்றும் உயிரைப் பணயம் வைக்கும் வேலைநிறுத்தத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம், புதன்கிழமை (08) தெரிவித்தது.

புதன்கிழமை (08) காலை 8 மணி முதல் ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியால அடையாள வேலைநிறுத்தம் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சங்கத்தின் செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழிற்சங்கங்களினால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில்,  மருத்துவத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து தொழிற்சங்கங்களும் வரலாற்றில் முதல் தடவையாக வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அவர் கூறினார்.

அவசரகால சேவைகளுக்குச் செல்லும் வைத்திய நிபுணர்களைத் தவிர, நாட்டிலுள்ள வைத்தியசாலைகள் அனைத்திலும் கடமையாற்றும் வைத்தியர்கள் வேலை நிறுத்தில் ஈடுபட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரியமாக தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடாத பிரிவினரும் அரசாங்கத்துக்கு எதிரான தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவித்த அவர், அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காவிட்டால் மேலும் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட தயங்கமாட்டோம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 13
இலங்கைசெய்திகள்

இலங்கையில் மற்றுமொரு விபத்து – சிறுவர்கள், பெண்கள் உட்பட 37 பேர் காயம்

கண்டியில் நேற்று இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் 37 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்து...

19 12
இலங்கைசெய்திகள்

இலங்கை முழுவதும் உப்பு தட்டுப்பாடு – ஒரு கிலோ கிராம் 500 ரூபாய்..!

நாட்டில் உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது....

18 12
உலகம்செய்திகள்

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடூரம்.. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவிடத்தில் குண்டு வீச முயற்சி

தமிழ்நாடு சென்னையின் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, முன்னாள் முதல்வர்களான அண்ணாத்துரை மற்றும் கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களை...

16 14
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐ.தே.க.வுக்கு சிக்கல்

கொழும்பு மாநகர சபைக்கு உறுப்பினர்களை நியமிப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அரசியல்...