farming
இலங்கைசெய்திகள்

விவசாயிகளுக்கு கடன் வசதி!

Share

எதிர்வரும் பெரும்போகத்தில் அர்ப்பணிப்புடன் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு கடன் வழங்கும் நிகழ்வு நெடோல்பிட்டிய பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் நேற்று (17) ஆரம்பமானது.

வழக்கமாக பெரும்போகத்தில் 8 இலட்சத்து 14 ஆயிரத்து 678 ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளப்படும்

2022/2023 காலப்பகுதி பருவத்திற்கான கடன் ஆவணங்களை, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று காலை கையளித்துள்ளார். 11 பேருக்கு தலா 50 ஆயிரம் படி விவசாய கடன்களை அமைச்சர் வழங்கியுள்ளார்.

விவசாய கூட்டுறவு வங்கி மூலம் முன்னோடி திட்டமாக இந்த கடன் உதவி வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு 2 இலட்சத்து 7 ஆயிரத்து 103 விவசாயிகளுக்கு, 7.1 பில்லியன் ரூபா இந்த கடனுதவிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஆகஸ்ட் 2022 வரை 1 இலட்சத்து 54 ஆயிரத்து 641 விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கடன்களில், 5.4 பில்லியன் ரூபா திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அரசாங்கம் 350 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...