முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
இலங்கைசெய்திகள்

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

Share

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு – மூன்று வாரங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்கவை. சீனாவின் வுகான் மாநிலத்தை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் இங்கு தொற்றுப் பரவுகின்றது.

இவ்வாறான நேரத்தில் நாங்கள் 5 விநாடிகளுக்கு முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் நம்மிடையே உணவு இன்றி இறப்பதா? ஒட்சிசன் இன்றி இறப்பதா? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால், உணவு இல்லாவிட்டால் இருப்பவர்கள் எமக்கு வழங்குவர். ஒட்சிசன் இல்லாவிட்டால் எம்மால் வாழவே முடியாது போகும். இதனால் இது தொடர்பில் தீர்மானங்களை அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...