COVID தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் அஜித் ரோஹண!
இலங்கைசெய்திகள்

மாவட்ட எல்லைகளில் முப்படையினர் களமிறக்கம்!!

Share

மாவட்ட எல்லைகளில் முப்படையினர் களமிறக்கம்!!

அனைத்து மாவட்டங்களின் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை உள்ளடக்கிய சிறப்பு வீதித் தடைகளை நிறுவ பொலிஸ் முடிவு செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகளை மீறும் தனிநபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்தார்.

இந்த சிறப்பு நடவடிக்கைக்கு முப்படையினரும் பொலிஸாருடன் இணைந்து கடமையாற்றுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், பொலிஸ் வீதித் தடைகள் மற்றும் மொபைல் ரோந்து எல்லைகளுக்குள் பயணம் செய்யும் நபர்களை அடையாளம் காணும், அதே நேரத்தில் மேல் மாகாணத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் சோதனைச் சாவடிகளை உள்ளடக்கிய கடுமையான வீதித் தடைகள் செயற்படுத்தப்படும்.

எல்லைகளைத் தாண்டி பயணம் செய்தால் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் கைதுசெய்யப்படுவார்கள். முகக்கவசம் தொடர்பான தனிமைப்படுத்தல் விதிமுறைகள் இன்று முதல் கண்டிப்பாக விதிக்கப்படும்.

சட்டத்தை மீறும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...