death 1 1024x680 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மண்ணெண்ணெய் வாங்க வரிசையில் காத்திருந்த முதியவர் மரணம்!

Share

கண்டி புறநகர் பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மண்ணெண்ணெய் வாங்குவதற்காக நீண்டநேரம் வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்டி, வத்தேகம, உடதலவின்ன பகுதியை சேர்ந்த 71 வயதுடைய மொஹமட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கொட்டும் மழைக்கு மத்தியில் சுமார் 5 மணிநேரம் இவர் வரிசையில் நின்றதாகவும், மயங்கி வீழ்ந்தவரை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் வரிசையில் நின்றவர்கள் தெரிவித்தனர்.

எனினும், வைத்தியசாலையில் சேர்க்க்படும்போது அவர் உயிரிழந்துவிட்டார் என தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்தார்.

நாட்டில் இவ்வாறானதொரு நிலையை ஏற்படுத்தி மக்களை வதைக்கும் அரசே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என கண்டி பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....