Akila Viraj Kariyawasam
அரசியல்இலங்கைசெய்திகள்

மக்களுக்காகவே மாநாட்டில் பங்கேற்பு! – ஐ.தே.க தெரிவிப்பு

Share

” அரசை பாதுகாப்பதற்கு அல்ல, நாட்டு மக்களுக்காகவே எமது கட்சி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. எனினும், அதில் பங்கேற்கும் முடிவை ஐக்கிய தேசியக் கட்சி எடுத்துள்ளது.

இது தொடர்பில் வினவியபோதே அகில விராஜ்காரியவசம் மேற்கண்டவாறு கூறினார்.

” சர்வக்கட்சி மாநாட்டை நாம் புறக்கணித்தால் அது அரசுக்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எதிரணிகள்மீது பழிசுமத்திவிட்டு தப்பிக்க முற்படலாம். அதேபோல கருத்துகளை முன்வைக்க சர்வக்கட்சி மாநாடே பொருத்தமான இடம்.

எனவேதான் நாட்டு மக்களின் நலன்கருதி, யோசனைகளை முன்வைப்பதற்காக எமது கட்சி மாநாட்டில் பங்கேற்கின்றது.” – என்றும் அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 4
உலகம்செய்திகள்

நீண்ட இடைவெளிக்குப் பின் சீனா – வடகொரியா பயணிகள் தொடருந்து சேவை நாளை மீள ஆரம்பம்!

கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக கடந்த ஆறு ஆண்டுகளாக இடைநிறுத்தப்பட்டிருந்த சீனா மற்றும் வடகொரியா இடையிலான...

29 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பேலியகொட மீன் சந்தை கழிவு உரம் தயாரிப்பு: பொது சுகாதார பரிசோதகர் விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

பேலியகொட மெனிங் மீன் சந்தையில் எஞ்சியிருக்கும் மீன்களைப் பயன்படுத்தி தனியார் நிறுவனம் ஒன்று உரம் தயாரிக்கும்...

28 4
செய்திகள்விளையாட்டு

2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரிலிருந்து ஈரான் விலகல்: விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவிப்பு!

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் கூட்டுத் தலைமையின்கீழ் நடைபெறவுள்ள 2026 உலகக்கோப்பை கால்பந்து...

27 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: மசகு எண்ணெய் விலை 200 டொலரை எட்டக்கூடும் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்கள் மீது...