இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பரு. வைத்தியசாலை நீர் விநியோக தடை! – பதில் வைத்திய அத்தியட்சகர் விளக்கம்

point pedro
Share

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று (12) செவ்வாய்க்கிழமை பிற்பகல் நீர் விநியோகம் தடைப்பட்டது சம்பந்தமாக ஊடகமொன்றில் செய்தி ஒன்று வெளியாகியிருந்த நிலையில் இது தொடர்பான விளக்கம் ஒன்றை வைத்தியசாலை பதில் வைத்திய அத்தியட்சகர் வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

நேற்றைய செய்தியில் மின்பிறப்பாக்கி பழுதடைந்தமையால் நீர் விநியோகம் தடைப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் என்ற வகையில் ஊடகங்களுக்கு விளக்கம் ஒனறை அளிக்க விரும்புகின்றேன்.

நேற்று பிற்பகல் நீர்த்தாங்கிக்கு நீரைச் செலுத்துகின்ற கிணற்றினுள் நீருக்குள் காணப்படுகின்ற மோட்டர் திடீரென பழுதடைந்துவிட்டது. எங்களது வைத்தியசாலையின் இயந்திரப்பகுதி ஊழியர்கள் கிணற்றிலிருந்து அம் மோட்டரை வெளியே எடுத்து அதனைப் பரிசோதித்தபோது அதனை உடனடியாக மீள இயக்க முடியாமலிருந்தது.

இதன் காரணமாக இன்னொரு பதிலீட்டு மோட்டரை கிணற்றினுள் இறக்கி பொருத்த முற்பட்டபோது கிணற்றினுள் இருந்த நீர்க்குழாயுடன் அது பொருந்தவில்லை. பின்னர் அதற்குரிய மாற்று ஒழுங்குகள் செய்யப்பட்டு பொருத்தப்பட்டது.

எமது வைத்தியசாலை ஊழியர்கள் அதிகாலை 2 மணிவரை திருத்துகின்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை 2 மணிக்கு நீர் விநியோகம் சீராக்கப்பட்டது.

எமது வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுதடையவில்லை. சீரான மின் விநியோகம் மின்சார சபையினால் வழங்கப்படுகின்றது.

எமது வைத்தியசாலையின் நீர்த்தாங்கியிலுள்ள சேமிப்பு நீர் முடிவடைந்த பின்னரே நீர் விநியோகம் தடைப்பட்டது.

நாம் உடனடியாக நீர் விநியோகத்தை சீராக்குவதற்குரிய முயற்சியை ஆரம்பித்து அதிகாலை 02 மணியளவில் நீர் விநியோகம் சீராக்கப்பட்டது – என்றுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...