அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பதாகைகள் தீயிட்டு எரிக்கப்பட்டு பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு!

Share
34 6 2
Share

இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமரை வரவேற்கும் முகமாக வீதிகளில் கட்டப்பட்டு இருந்த பதாகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எரிக்கப்பட்டன.

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் முகமாக பல நிகழ்வுகம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிரதமரின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.

யாழ்ப்பாணத்திற்க்கு வருகை தந்துள்ள பிரதமர், மட்டுவில் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பொருளாதார மத்திய நிலையத்தினை திறந்து வைத்தார்.

குறித்த போராட்டத்தில் கலந்துகொள்ள முல்லைத்தீவில் இருந்து பேருந்தில் வந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் மட்டுவில் அம்மன் ஆலயத்திற்கு அருகில், பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இந்த நிலையிலேயே பிரதமரை வரவேற்கும் முகமாக வீதிகளில் கட்டப்பட்டு இருந்த பதாகைகள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் எரிக்கப்பட்டன.

இதேவேளை யாழில் இருந்து சென்ற வேலன் சுவாமிகள் உள்ளிட்டோரை மட்டுவில் வண்ணாத்தி பாலம் பகுதியில் தடுத்து நிறுத்திய பொலிஸார் அவர்களையும் வாகனத்தில் இருந்து இறங்காதவாறு தடுத்து நிறுத்தி இருந்தனர்.

நிகழ்வு முடிந்து பிரதமர் நிகழ்விடத்தில் இருந்து புறப்பட்டதும் , போராடகாரர்கள் குறித்த பகுதிக்கு செல்வதற்கு பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டனர்.

இதனைத்தொடர்ந்து, வாகனத்தில் இருந்து இறங்கிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோர் , பிரதமரை வரவேற்று கட்டப்பட்டு இருந்த பதாகைகளை கிழித்து , தீயிட்டு எரித்து தமது எதிர்ப்பினையும் ஆற்றாமையையும் வெளிப்படுத்தினர்.

34 5 34 4 34 8 34 3

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...