பதாகைகளை சேதப்படுத்தியதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உப தவிசாளரிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்ட நிகழ்வின் பதாகைகளை சேதப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து வந்ததாகக்கூறி இருவரிடம் சாவகச்சேரி பொலிஸார் இன்றைய தினம் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ் மற்றும் சாவகச்சேரி பிரதேச சபை உப தவிசாளர் செ.மயூரன் ஆகியோரிடமே இவ்வாறு வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
#SriLankaNews
Leave a comment