ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாளை (23) முற்பகல் 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் குறித்த சர்வகட்சி மாநாடு கூட்டப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அங்கீகரிக்கப்பட்ட 27 அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த மாநாட்டில் பங்கேற்காதிருக்க முக்கியமான கட்சிகள் முடிவெடுத்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி , ரெலோ, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் , தேசிய சுதந்திர முன்னணி , பிவிதுரு ஹெல உறுமய, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் புறக்கணிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளன.
அத்துடன், ஜனநாயக இடதுசாரி முன்னணி, இலங்கை கம்யூனிஸ் கட்சி, முஸ்லிம் தேசியக் கூட்டணி , தேசிய காங்கிரஸ் ஆகியனவும் மாநாட்டை புறக்கணிக்கும் முடிவை எடுக்கக்கூடும் என அறியமுடிகின்றது.
அதேவேளை, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி , லங்கா சமாமஜக்கட்சி , எமது மக்கள் சக்தி கட்சி, ஈபிடிபி, தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி , மக்கள் ஐக்கிய முன்னணி, தமிழ் அரசுக்கட்சி, புளொட், ஐக்கிய தேசியக்கட்சி ஆகியன மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.
#SriLankaNews
Leave a comment