IMG 20220317 WA0123
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நாம் மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல! – வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி

Share

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோமென யாழ் மாவட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்தார்.

காணாமல் போனோரின் குடும்பங்களுக்கு ரூ.100,000 கொடுப்பனவு, மரணச் சான்றிதழும் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை தொடர்பாக இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல்போனோர் அலுவலகம் , இழப்பீடு, மரண சான்றிதழ் போன்ற விடயங்களை நாங்கள் ஏற்க மறுத்ததால் தற்போது வாழ்வாதார உதவி என்ற பெயரில் ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை வழங்க முற்படுகின்றனர். யாருமே இந்த ஒரு லட்சம் ரூபா கொடுப்பனவை ஏற்றுக்கொள்ளக்கூடாது. எமது பிள்ளைகளுக்கான கொடுப்பனவு ஒரு லட்சம் ரூபாவா?

கடந்த காலங்களில் எமது பிள்ளைகள் காணாமல் போவதற்கு பிரதானமாக செயற்பட்டவரே இன்று ஜனாதிபதியாக உள்ளார். அவர் இன்று எமது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவிகள் தரப்போவதாக கூறுகிறார்.

நாம் வீதியில் நின்று போராடி மடிப்பிச்சை கேட்பதாக ஜனாதிபதி கருதுகிறார் போல. நாம் ஒருபோதும் மடிப்பிச்சை கேட்கவில்லையே எமது பிள்ளைகளின் உயிர்பிச்சையையே கேட்கின்றோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17510297000
சினிமாசெய்திகள்

நடிகர் கிருஷ்ணாவுக்கு ஜாமீன் கிடைக்குமா..? விசாரணை தீவிரம்…

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட நடிகர் கிருஷ்ணா தற்போது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered
உலகம்செய்திகள்

மிகப்பெரிய வெற்றி! ட்ரம்புக்கு சாதகமாகியுள்ள முக்கிய தீர்ப்பு

அமெரிக்கா முழுவதும் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுகளைத் தடுக்க நீதிபதிகளின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தும் 6-3...

3 13
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி – கைது செய்யப்படவுள்ள முக்கிய அரசியல்வாதி

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைது செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு கொழும்பு தலைமை நீதவான்...

5 13
இலங்கைஉலகம்செய்திகள்

அநுர குமாரவின் திட்டத்தை ஆதரிக்கும் வோல்கர் டர்க்

தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அநுர குமார திசாநாயக்கவும்,...