தாய்லாந்து திருவிழாவில் குண்டு வெடிப்பு: மூவர் பலி…பலர் படுகாயம்!
Three Killed And Dozens Injured Bomb Thai Festival
தாய்லாந்தில்(Thailand) இடம்பெற்ற திருவிழா கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 50க்கும் அதிகமானோர் படுகாயமடைந்திருப்பதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் வருடாந்த திருவிழா நடைபெற்றது.
இதன்போது விழாவில் கலந்து கொண்ட இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கோபமடைந்த சிலர் அந்த கூட்டத்தை நோக்கி வெடிகுண்டு வீசியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததுடன் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், மீட்பு படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் இருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.