அரசியல்இலங்கைசெய்திகள்

டித்வா புயல் பாதிப்பு: பெண்கள், சிறுமிகளுக்கு அவசர உதவிகள் வழங்க $8.3 மில்லியன் நிதி கோரிக்கை!

Share

இலங்கையில் பாரிய வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை ஏற்படுத்திய ‘டித்வா’ புயலால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அவசர மற்றும் உயிர்காக்கும் உதவிகளை வழங்குவதற்காக, ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (UNFPA) 8.3 மில்லியன் அமெரிக்க டொலர் மனிதாபிமான நிதியுதவிக்கான அவசர வேண்டுகோளை விடுத்துள்ளது.

இந்தப் புயல் 25 மாவட்டங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமான மக்களைப் பாதித்துள்ளது.

சுமார் 520,000 வயதுவந்த பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 22,500 க்கும் அதிகமான கர்ப்பிணிப் பெண்கள் உள்ளதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் மதிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், 194,000 க்கும் அதிகமான வயதான பெண்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளிக்கும் பின்னரான சூழலில்,சுகாதாரச் சேவைகள் தடைப்பட்டதாலும், இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் பாதுகாப்பு மற்றும் தனிமைப் பாதுகாப்பு இல்லாமையாலும், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு பாலியல் வன்முறைக்கான அபாயமும் மனநலப் பிரச்சினைகளும் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உடனடியாக 1,225 அத்தியாவசியப் பொதிகளை விநியோகித்த ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம், நிலைமை மோசமடைந்து வருவதால், 208,000 க்கும் அதிகமான பெண்களுக்கு இனப்பெருக்கச் சுகாதாரம், வன்முறைத் தடுப்பு மற்றும் மனநல ஆதரவு போன்ற அத்தியாவசியச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இருப்பினும், தேவையான நிதியில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், உயிர்காக்கும் உதவிகள் தேவைப்படுவோரைச் சென்றடைய உடனடி சர்வதேச ஆதரவை வழங்குமாறு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் உலக நாடுகளையும் நன்கொடையாளர்களையும் அவசரமாகக் கேட்டுக் கொண்டுள்ளது.

Share
தொடர்புடையது
49b63185 90f2 4718 86a9 514694fd4c00
செய்திகள்இலங்கை

வாக்குறுதி அளித்தபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சயமாக ஒழிக்கப்படும் – பிரதமர் ஹரிணி அமரசூரிய!

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு, நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை கட்டாயம் ஒழிக்கப்படும்...

harini 07 02 2025 1 1000x600 1
செய்திகள்உலகம்

மிஸ் பின்லாந்து பட்டம் பறிப்பு – ஆசிய நாடுகளிடம் மன்னிப்பு கோரினார் பின்லாந்து பிரதமர்!

ஆசியர்களைக் கேலி செய்யும் வகையில் இனவெறிப் போக்கைக் வெளிப்படுத்திய புகாரில், 2025-ஆம் ஆண்டுக்கான மிஸ் பின்லாந்து...

1598682810 0047
செய்திகள்உலகம்

ஆர்ட்டிக் திமிங்கிலங்களில் அபாயகரமான வைரஸ் பாதிப்பு: ஆளில்லா விமானங்கள் மூலம் புதிய கண்டுபிடிப்பு!

ஆர்ட்டிக் கடலில் வாழும் திமிங்கிலங்களின் ஆரோக்கியத்தைக் கண்டறிய ஆளில்லா விமானங்கள் (Drones) மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்,...

Progress review meeting of the Ministry of Transport 1
இலங்கைஅரசியல்செய்திகள்

நாடு மீண்டும் திவால் நிலைக்குத் தள்ளப்படாது – புள்ளிவிபரங்களுடன் ஜனாதிபதி அநுர குமார அதிரடி விளக்கம்!

பேரிடர் நிவாரணத்திற்காக ஒதுக்கப்பட்ட 500 பில்லியன் ரூபா நிதியினால் நாடு மீண்டும் திவால்நிலைக்குச் செல்லும் என்ற...