4 38
இலங்கைசெய்திகள்

சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

Share

சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கும் சீன(China) மக்கள் வங்கிக்கும் இடையில் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இந்தநிலையில், அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு குறித்த இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை, இரண்டு வங்கிகளும் புதுப்பித்துள்ளன.

இது, 10 பில்லியன் யுவான் (சராசரியாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதியின் அடிப்படையில், இலங்கைக்கும் சீனாவுக்கும்(China) இடையில் நிதி ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதே நேரத்தில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் பான் கோங்செங், சீன மக்கள் வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
25 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அரச சுபநேரக் குழுவின்மையால் சர்ச்சை: ‘சர்வஜன அதிகாரம்’ வெளியிட்ட புத்தாண்டு சுபநேரப் பத்திரம்!

2024 ஆம் ஆண்டில் கலாசார திணைக்களத்தால் அரச சுபநேரக் குழு கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, அரசாங்கம் இதுவரையில்...

24 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் சுகாதார சேவையை வலுப்படுத்த புதிய முயற்சி: 2,918 செவிலியர் மாணவர்கள் இணைப்பு!

இலங்கையின் சுகாதாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், புதிய மாணவ செவிலியர் பயிற்சிக்காக 2,918 பேரை இணைத்துக்கொள்ளும்...

23 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கில் அமைதியை வலியுறுத்தும் ஹமாஸ்: ஈரானிடம் விடுத்த கோரிக்கை!

மத்திய கிழக்கில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே போர் தீவிரமடைந்து வரும்...

22 11
செய்திகள்உலகம்

புதிய தலைவர் மொஜ்தபா காமெனிக்கு அச்சுறுத்தல் விடுத்தால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் – ஈரான் எச்சரிக்கை!

ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள மொஜ்தபா காமெனியை (Mojtaba Khamenei) இலக்கு வைத்து அமெரிக்காவோ...