இலங்கைசெய்திகள்

சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

Share
4 38
Share

சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கும் சீன(China) மக்கள் வங்கிக்கும் இடையில் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இந்தநிலையில், அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு குறித்த இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை, இரண்டு வங்கிகளும் புதுப்பித்துள்ளன.

இது, 10 பில்லியன் யுவான் (சராசரியாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதியின் அடிப்படையில், இலங்கைக்கும் சீனாவுக்கும்(China) இடையில் நிதி ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதே நேரத்தில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் பான் கோங்செங், சீன மக்கள் வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...