4 38
இலங்கைசெய்திகள்

சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

Share

சீனாவின் நாணய மாற்று வசதியை மூன்று ஆண்டுகளுக்கு புதுப்பித்த இலங்கை

இலங்கை மத்திய வங்கிக்கும் சீன(China) மக்கள் வங்கிக்கும் இடையில் இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும், 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

இந்தநிலையில், அசல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ், மேலும் மூன்று ஆண்டுகளுக்கு குறித்த இருதரப்பு நாணய மாற்று ஒப்பந்தத்தை, இரண்டு வங்கிகளும் புதுப்பித்துள்ளன.

இது, 10 பில்லியன் யுவான் (சராசரியாக 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள்) நாணய மாற்று வசதியின் அடிப்படையில், இலங்கைக்கும் சீனாவுக்கும்(China) இடையில் நிதி ஒத்துழைப்பை பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க, இலங்கை மத்திய வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார், அதே நேரத்தில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் பான் கோங்செங், சீன மக்கள் வங்கியின் சார்பாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
21 1
இலங்கைசெய்திகள்

விபத்துக்குள்ளான கெப் ரக வாகனம்

புல்மோட்டையிலிருந்து சென்ற கெப் வாகனம் புடவைக்கட்டில் விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று (23) அதிகாலை 04:35 மணியளவில் புல்மோட்டையில்...

19 2
இலங்கைசெய்திகள்

மூதூர் பிரதேச சபை இலங்கை தமிழரசுக் கட்சி வசம்!

திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கான, தவிசாளர் மற்றும் உதவி தவிசாளர் தெரிவு இன்று(23) கிழக்கு...

20
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர்...

22 1
உலகம்செய்திகள்

அமெரிக்க நகரங்களில் ட்ரம்பிற்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்

ஈரான்(IRAN) மீதான தாக்கு தலை கண்டித்தும் போரை உடனே நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவில்(USA) பல்வேறு...