67650058 877890162581041 1915527385059426304 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கதவுகள் திறந்தே உள்ளன! – கூட்டமைப்புக்கு அழைப்பு

Share

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ்க் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றலாம். அதற்கான கதவுகள் திறந்தே உள்ளன.”

இவ்வாறு ஜனாதிபதி பணியாட்தொகுதி பிரதானியும், ஜனாதிபதியின் பாதுகாப்பு விவகார ஆலோசகருமான சாகல ரத்னாயக்க தெரிவித்தார்.

சர்வக்கட்சி அரசாங்கத்துக்கு ஆதரவு திரட்டுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளனவா என எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாம் தமிழ்க்கட்சிகளும் பேச்சு டத்திக் கொண்டிருக்கிறோம். சம்பந்தன், சுமந்திரன் ஆகியோருடனும் விக்னேஸ்வரனுடனும் பேசி வருகிறோம். எமது கதவு அனைவருக்கும் திறந்திருக்கிறது. ஏனெனில் இது நாட்டை முன்நிறுத்தி யோசிக்க வேண்டிய காலம். தமிழ்க்கட்சிகள் எம்முடன் இணைந்து பணியாற்றுவதில் எம் தரப்பில் எந்தத் தடையும் இல்லை. பேச்சு மூலம் தடைகளைக் கடந்து பிரச்சினைகளுக்கு முடிவு காண முடியும் எனக் கருதுபவரே எமது ஜனாதிபதி. இது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய தருணம் என்பதை எவரும் மறந்துவிடலாகாது.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
64 magnitude earthquake strikes baculin philippines no tsunami warning issued 1767762531718
செய்திகள்உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 6.7 மெக்னியூட் அளவில் அதிர்வு – சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்குப் பகுதியான மிண்டானாவோ (Mindanao) தீவில் இன்று (07) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது....

Seeman 3
செய்திகள்இந்தியா

ஜன நாயகன் படத்தைத் தடுக்கும் அளவிற்கு சர்ச்சைகள் இல்லை – சென்சார் தாமதம் குறித்து சீமான் ஆவேசம்!

இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ (Jana Nayagan) திரைப்படம்...

Screenshot 2025 12 05 173047
செய்திகள்இலங்கை

பதிவு செய்யப்படாத வர்த்தகர்களுக்கும் நிவாரணம்: அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு புதிய கடன் திட்டம் – ஜனாதிபதி அறிவிப்பு!

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தகர்களை (SME) மீண்டும் கட்டியெழுப்புவதற்கான...

9f9401ee34854fe8b9424a9905db62531679431836355184 original
செய்திகள்இலங்கை

திருச்சி சிறப்பு முகாம்: விடுதலை செய் அல்லது நாடு கடத்து – இலங்கை இளைஞரின் தொடர் உணவுத் தவிர்ப்புப் போராட்டம்!

இந்தியாவின் திருச்சி சிறைச்சாலையில் உள்ள சிறப்பு முகாமில் (Special Camp) தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை இளைஞர்...