22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

Share

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது.

வறுமை ஒழிப்பு, பசி, சமத்துவமின்மை, காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு, அமைதி, நீதி உட்பட 17 இலக்குகளை 2030ஆம் ஆண்டுக்குள் அடையும் வகையிலான இலக்குகளை முன்வைத்து இந்த பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதன்படி நேற்று வெளியி;டப்பட்ட பட்டியலில், மொத்தம் 193 நாடுகள் இடம்பெற்றுள்ளது. இதில் இந்தியா, 67 புள்ளிகளுடன் 99வது இடத்தை பிடித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் இந்த தரவரிசைப் பட்டியலில் 100 இடங்களுக்குள், முதன்முறையாக இந்தியா இடம்பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியா 109ஆவது இடத்திலும், 2023ல் 112ஆவது இடத்திலும் தரப்படுத்தப்பட்டிருந்தது.

இதேவேளை இந்த வரிசையில், சீனா, 74.4 புள்ளிகளுடன் 49வது இடத்திலும், அமெரிக்கா, 75.2 புள்ளிகளுடன் 44வது இடத்திலும் உள்ளன. தரவரிசையில், ஐரோப்பிய நாடுகளான பின்லாந்து, ஸ்வீடன், டென்மார்க் ஆகியவை முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

பூட்டான், 74வது இடத்தையும், நேபாளம், 85வது இடத்தையும், பங்களாதேஸ் 114வது இடத்தையும், பாகிஸ்தான் 140வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதேபோல், கடல்சார் அண்டை நாடுகளான மாலைத்தீவு, இலங்கை உள்ளிட்ட நாடுகள் முறையே 53 மற்றும் 93வது இடங்களையும் பிடித்துள்ளன.இலங்கை உணவகம்

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...