Ali Sabry2
அரசியல்இலங்கைசெய்திகள்

அழுத்தம் காரணமாகவே இராஜினாமா செய்தேன்! – கூறுகிறார் அலிசப்ரி

Share

” அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு எனது குடும்ப உறுப்பினர்களும் அழுத்தம் கொடுத்தனர். எனவே, நான் நிதி அமைச்சர் பதவியை துறந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக அமைந்தது .” – என்று நிதி அமைச்சர் அலிசப்ரி தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நாட்டில் தற்போது நான்தான் நிதி அமைச்சர். சட்டப்பூர்வமாகவே அப்பதவியை வகிக்கின்றேன். எனது தலைமையிலான குழுவே 18 ஆம் தேதி சர்வதேச நாணய நிதியம் செல்லவுள்ளது.

நிதி அமைச்சு பதவியை ஏற்க நான் தயாராக இருக்கவில்லை. ஆனால் ஆளுங்கட்சியின் விடுத்த கோரிக்கையால்தான் அந்த பதவியை ஏற்றேன். அதன்பின்னர் எனக்கு அழுத்தங்கள் வந்தன. குடும்ப உறுப்பினர்கள்கூட, பதவி துறக்குமாறு வலியுறுத்தினர்.

பொருளாதார நிபுணர்கள்தான் நிதி அமைச்சு பதவியை ஏற்க வேண்டும் என்ற கருத்து சமூகத்திலும் நிலவியது. எனவே, தகுதியான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்க வழிவிட்டே நான் பதவி விலகினேன். எனினும், எவரும் அந்த பதவியை ஏற்கவில்லை. அதனால்தான் நாட்டு நலன் கருதி நான் ஏற்றேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
anura 3
செய்திகள்இலங்கை

இலங்கை முழுவதும் அவசரகால நிலை தொடர்ந்தும் நீடிப்பு: ஜனாதிபதி அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட இயற்கை பேரழிவுகள் மற்றும் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட...

52e545af 47a4 4384 9d9a 6528a8375208 w1080 h608 s
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நெகிழ்ச்சியூட்டும் மனிதாபிமானம்: நாட்டின் மறுசீரமைப்புக்காக ஒரு நாள் சம்பளத்தை வழங்கிய கொட்டியாக்கலை தோட்டத் தொழிலாளர்கள்!

நாட்டின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகத் தங்களது ஒரு நாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கி, ஹட்டன் – பொகவந்தலாவை,...

images 15 1
இலங்கைசினிமாபொழுதுபோக்கு

99ஆவது ஒஸ்கார் விருது விழா: இலங்கையின் சிறந்த திரைப்படத்தைத் தெரிவு செய்யும் பணிகள் ஆரம்பம்!

2027 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள 99ஆவது ஒஸ்கார் விருது விழாவின் சர்வதேசத் திரைப்படப் பிரிவில்...

MediaFile 3 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் தீவிர சோதனை – மின்னஞ்சல் மூலம் மிரட்டல்!

தோஹாவிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் ஒன்றில் குண்டு இருப்பதாகக் கிடைத்த மிரட்டலைத்...