முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!
இலங்கைசெய்திகள்

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

Share

முக்கியமானது உணவா? ஒட்சிசனா? – அரச அதிகாரிகளே தீர்மானிக்கட்டும்!!

இலங்கையில் டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் மேலும் தீவிரமடையும் அபாயம் காணப்படுகின்றது. எனவே, தற்போதைய நிலைமையில் மிகவும் முக்கியமானது உணவா? அல்லது ஒட்சிசனா? என்பது தொடர்பில் அரச அதிகாரிகள் தீர்மானிக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவனத்தின் பணிப்பாளரான பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அடுத்த இரண்டு – மூன்று வாரங்கள் இலங்கைக்கு மிகவும் தீர்மானமிக்கவை. சீனாவின் வுகான் மாநிலத்தை விடவும் இரண்டு மடங்கு வேகத்தில் இங்கு தொற்றுப் பரவுகின்றது.

இவ்வாறான நேரத்தில் நாங்கள் 5 விநாடிகளுக்கு முகக்கவசம் அணியாமல் இருந்தால் கூட நமக்குத் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதனால் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும்.

இதேவேளை, எதிர்காலத்தில் நம்மிடையே உணவு இன்றி இறப்பதா? ஒட்சிசன் இன்றி இறப்பதா? என்ற கேள்விகள் எழலாம்.

ஆனால், உணவு இல்லாவிட்டால் இருப்பவர்கள் எமக்கு வழங்குவர். ஒட்சிசன் இல்லாவிட்டால் எம்மால் வாழவே முடியாது போகும். இதனால் இது தொடர்பில் தீர்மானங்களை அரச அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்று சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FVR2hd2cLIcHfFF66K3BB
செய்திகள்அரசியல்இலங்கை

மலையகமே எமது தாயகம்; வடக்கு, கிழக்குக்குச் செல்லத் தயாரில்லை – சபையில் வேலுசாமி ராதாகிருஷ்ணன் எம்.பி. முழக்கம்!

மலையக மக்கள் தமது தாயகமாக மலையகத்தையே கருதுவதாகவும், அங்கிருந்து இடம்பெயர்ந்து வடக்கு அல்லது கிழக்கு மாகாணங்களுக்குச்...

images 4 5
செய்திகள்இலங்கை

சம்பா, கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்: அமைச்சர் வசந்த சமரசிங்க எச்சரிக்கை!

‘டிட்வா’ (Ditwa) சூறாவளி காரணமாக நாட்டின் விவசாயத் துறை பாரிய பின்னடைவைச் சந்தித்துள்ளதாகவும், இதன் விளைவாக...

death ele
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அநுராதபுரத்தில் சோகம்: காட்டு யானைத் தாக்குதலில் 48 வயது விவசாயி பலி; நண்பர்கள் உயிர் தப்பினர்!

அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியில் தனது விவசாய நிலத்தைப் பாதுகாக்கச் சென்ற விவசாயி ஒருவர் காட்டு யானைத்...

images 3 6
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனவரி 6 வரை பாராளுமன்றம் ஒத்திவைப்பு: உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நீண்ட விடுமுறை!

இலங்கை பாராளுமன்றத்தின் அமர்வுகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 06 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில்,...