Untitled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கால்நடைகள் வெட்டப்படுவதால் இயற்கை உரப் பாவனை குறைய வாய்ப்பு!

Share

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது என தீவக சிவில் சமூக அமைப்பின் செயலாளர் மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மா.இளம்பிறையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கால்நடைகளின் எருக்களை உரங்களாக மாற்றி அவற்றின் மூலம் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது
கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது. அத்துடன் இது விவசாயிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வசாதாரணமாக தீவுப்பகுதியில் ஒவ்வொரு நாளும் மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டு வெட்டப்பட்டு மண்டைதீவு காவலரணையும் தாண்டி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.

தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இன்று நான்கு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...