Untitled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கால்நடைகள் வெட்டப்படுவதால் இயற்கை உரப் பாவனை குறைய வாய்ப்பு!

Share

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது என தீவக சிவில் சமூக அமைப்பின் செயலாளர் மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மா.இளம்பிறையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கால்நடைகளின் எருக்களை உரங்களாக மாற்றி அவற்றின் மூலம் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது
கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது. அத்துடன் இது விவசாயிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வசாதாரணமாக தீவுப்பகுதியில் ஒவ்வொரு நாளும் மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டு வெட்டப்பட்டு மண்டைதீவு காவலரணையும் தாண்டி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.

தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இன்று நான்கு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...