Untitled
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கால்நடைகள் வெட்டப்படுவதால் இயற்கை உரப் பாவனை குறைய வாய்ப்பு!

Share

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது என தீவக சிவில் சமூக அமைப்பின் செயலாளர் மா.இளம்பிறையன் தெரிவித்துள்ளார்.

மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்படுவது தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மா.இளம்பிறையன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
தீவகத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கால்நடைகளின் எருக்களை உரங்களாக மாற்றி அவற்றின் மூலம் தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற இயற்கை உரப்பாவனை என்பது
கால்நடைகள் வெட்டப்படுவது காரணமாக குறைவடைவதற்கான வாய்ப்புள்ளது. அத்துடன் இது விவசாயிகளுக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

சர்வசாதாரணமாக தீவுப்பகுதியில் ஒவ்வொரு நாளும் மாடுகள் இறைச்சிக்காக திருடப்பட்டு வெட்டப்பட்டு மண்டைதீவு காவலரணையும் தாண்டி யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் விற்பனைக்கு செல்கின்றன.

தீவகப் பகுதிகளில் தொடர்ச்சியாக வளர்ப்பு மாடுகள் இறைச்சிக்காக வெட்டப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன. இன்று நான்கு மாடுகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளன. இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டும் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...