vikatan 2019 05 98fe3703 09f2 4f58 a001 f6c453bad9ff 122357 thumb
செய்திகள்இலங்கை

அரிசி வர்த்தகத்தில் இருந்து விலகிடுவோம்! – எச்சரிக்கை விடுப்பு

Share

அரிசி விலையை கட்டுப்படுத்த வேண்டாம் என இலங்கை அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட அரிசியை கொள்வனவு செய்வதற்காக ஒரு கிலோகிராம் நாட்டரிசி நெல்லுக்கு 50 ரூபாவையும் ஒரு கிலோகிராம் சம்பா நெல்லுக்கு 52 ரூபாவையும் அரசாங்கம் நிர்ணயித்துள்ளது.

இந்த நிர்ணயம் காரணமாக, அதிக விலைக்கு நெல்லை கொள்வனவு செய்து குறைந்த விலைக்கு அரிசியை எவ்வாறு விற்பனை செய்ய முடியும் என்ற கேள்வியை அரிசி உற்பத்தியாளர்கள் முன்வைக்கின்றனர்.

ஆகவே அரிசிக்கு நியாயமான விலையை வழங்கத் தவறும் பட்சத்தில் அரிசி வர்த்தகத்தில் இருந்து விலகப்போவதாக சங்கம் எச்சரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் நாட்டரிசிக்கு 110 ரூபாவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசிக்கு 130 ரூபாவும், ஒரு கிலோகிராம் கீரி சம்பா அரிசிக்கு 160 ரூபாவும் என விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...