Saudi
செய்திகள்உலகம்

லெபனான் தூதர் உடனடியாக வெளியேற வேண்டும்- சவுதி

Share

சவுதிக்கு எதிராக ஏமன் போர் குறித்து லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார்.

இதை தொடர்ந்து 48 மணி நேரத்துக்குள்ளாகத் தங்கள் நாட்டிலிருந்து லெபனான் தூதர் வெளியேற வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

லெபனான் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் கோர்தாஹி உள்நாட்டுச் செய்தி நிறுவனநிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஏமனில் சவுதி செய்யும் போர் அர்த்தமற்றது.

அந்தப் போரை சவுதிஉடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இக்கருத்துக்கு சவுதி அரசாங்கம் தனது கண்டனம் லெபனானுக்கு தெரிவித்தது .

இதனால் லெபனானுக்கும் சவுதிக்கும் இடையிலான உறவிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் லெபனான் தூதர் நாட்டை வெளியேற வேண்டும் என்று சவுதி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “ஏமன் அமைச்சர்கள் இவ்வாறு பேசுவது தமக்கு புதிதல்ல எனவும் லெபனான் அதிகாரிகள் உண்மைகளைப் புறக்கணித்ததாலும், சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதாலும் சவுதி வருத்தம் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

அத்தோடு லெபனானிலிருந்து வரும் இறக்குமதிப் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சவுதியிலிருந்து மக்கள் யாரும் லெபனானுக்குப் பயணிக்க வேண்டாம்.

சவுதிக்கான லெபனான் தூதர் 48 மணி நேரத்தில் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

1 Comment

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...