kopay
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கோப்பாய் வன்முறை! – மூவர் கைது

Share

கோப்பாய் பூதர்மடம் பகுதியில் உள்ள வீட்டினுள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த இருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, குறித்த கும்பல் வாடகைக்கு அமர்த்திச் சென்ற ஓட்டோ சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை மாலை இச் சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தில் கதிர்காமநாதன் குணரட்ணசிங்கம் (வயது-58) படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கும் அவர்களது அயலில் வசிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் இடையில் கருத்து வேறுபாடுஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவர்களை பழிவாங்குவேன் என கூறிய குறித்த இளைஞன் வன்முறை கும்பலை வரவழைத்து வன்முறையில் ஈடுபடவைத்தார் என்று கோப்பாய் பொலிஸ் நிலையில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்டோர் நீர்வேலியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்கள் சென்ற ஓட்டோ சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய 9 பேர் தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://tamilnaadi.com/news/local/2021/10/22/graduation-day-sword-team-attakasam/

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...