koli
செய்திகள்இந்தியா

கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் – இளைஞன் கைது

Share

கோலியின் குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்த இளைஞன் கைது.

இந்திய துடுப்பாட்ட வீரன் விராட் கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது இளைஞன் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

T 20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது.

இரண்டாவது ஆட்டத்தில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.

இந்தியா அணி அடுத்தடுத்து தோல்வியடைந்து வந்தது.

இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில் பலர் விமர்சனம் செய்து வந்தனர்.

இந்த விமர்சனங்களை கண்டித்து கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில் நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் பொலிஸார் இறங்கினர்.

விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

மேற்கொண்ட விசாரணையில், நாகேஷ் சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

தேடப்பட்ட நிலையில், மும்பை பொலிஸார் நேற்று அதிகாலை கைது செய்தனர். அத்தோடு அவர் மீது வழக்கும் தாக்கல் செய்துள்ளதாக இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

#india

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1726034823 FDIs 2
செய்திகள்இலங்கை

இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீடு 138% உயர்வு: 2025 செப்டம்பர் வரை $827 மில்லியன் ஈட்டப்பட்டுள்ளது

2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில், இலங்கையின் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கான...

9 18
இலங்கைசெய்திகள்

2029 இல் சிறையில் அடைக்கப்படவுள்ள அநுரவின் 159 எம்.பிக்கள் : கம்மன்பில சீற்றம்

பிவிதுரு ஹெல உருமய (Pivithuru Hela Urumaya) கட்சியின் தலைவரும் வழக்கறிஞருமான உதய கம்மன்பில அவர்கள்,...

8 19
இலங்கைசெய்திகள்

யாழ். கடற்பகுதிகளில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு.. தீவிர கண்காணிப்பில் புலனாய்வாளர்கள்

யாழ்ப்பாணம் – குடாநாட்டின் கடல் பகுதியில் அதிகமாக கடற்படை கண்காணிப்பும் ரோந்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பாதுபாப்பு...

7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில்...