7 19
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அதிரடி : பலர் கலக்கத்தில்

Share

சட்டவிரோத சொத்துக்குவிப்பு தொடர்பில் விசேட விசாரணை பிரிவு இலங்கையில் சட்டவிரோதமான முறையில் சொத்துக் குவிப்புக்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட விசாரணை பிரிவு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

இந்த விlயத்தை விசாரணை பிரிவு பழைய பொலிஸ் தலைமையாக கட்டிடத்தில் நிறுவப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் இந்த அலுவலகம் ஆர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் இன்று முற்பகல் குறித்த பிரிவு அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் பணம் சொத்துக்கள் குவித்தல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது. பணிப்பாளர் நாயகம் ஒருவரின் தலைமையின் கீழ் இந்த விசாரணை பிரிவு இயங்க உள்ளதாகவும் பிரதி பனிப்பாளர் நாயகம் ஒருவரும் இந்தப் பிரிவிற்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட 3 ஆண்டுகளுக்கு இந்த பிரிவின் பணிப்பாளர் நியாயமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதித்துள்ளது. குற்றப்புலனாய்வு பிரிவு மற்றும் நிதி குற்ற விசாரணை பிரிவு ஆகியனவற்றின் சிரேஸ்ட பொலிஸ் மா அதிபராக அசங்க கரவிட்ட கடமையாற்றி வருகின்றார்.

குற்றம் ஒன்றின் மூலம் உழைக்கப்படும் பணம் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்ட சொத்துக்களை 30 நாட்களுக்கு தடை செய்யவோ அல்லது பறிமுதல் செய்வதற்கோ இந்த விசேட விசாரணைப் பிரிவிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் குவிக்கப்பட்ட சொத்துக்கள் வெளிநாடுகளில் காணப்பட்டாலும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
k d
இலங்கை

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை.

இலங்கை மக்களுக்கு பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் வடமேல்...

G.L.Peiris
இலங்கை

அனைத்து மக்களும் ஒன்றிணைந்தால் சாத்தியம் என்கிறார் முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ்

கூட்டு எதிரணியின் அரசியல் பிரமுகர்கள் சர்வமதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி வருகின்றனர், இந்த நிலையில் இது...

dengue
இலங்கை

அதி அபாய மட்டத்தில் டெங்கு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

2026 ஆம் வருடத்தில் இதுவரை பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 68,071 ஆக பதிவாகி உள்ளதாக...

money
இலங்கை

அதிரடியாக உயர்த்தப்பட்ட சில கட்டணங்கள்.

  வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ,...