நாட்டில் தற்போது மண்ணெண்ணெய் தேவை இரட்டிப்பாகியுள்ளது எனவும், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் இல்லாத பகுதிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகம் செய்வது கட்டுப்படுத்தப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே இதை குறிப்பிட்டுள்ளார்.
நாளாந்தம் சுமார் 550 மெட்ரிக் தொன் மண்ணெண்ணெய் விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
72 மணித்தியாலங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என்ற கட்டுக்கதை ஒன்று பரவியதால் அதிகளவில் மண்ணெண்ணெயை மக்கள் கொள்வனவு செய்தமையாலேயே பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
#SrilankaNews
Leave a comment