norochchola power
செய்திகள்அரசியல்இலங்கை

கெரவலப்பிட்டிய யுகதனவி மின்உற்பத்தி விவகாரம் – மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

Share

” கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி நிலையம் தொடர்பில் ஆரம்பக்கட்ட உடன்படிக்கை மட்டுமே கைச்சாத்திடப்பட்டுள்ளது. இன்னும் இரு உடன்படிக்கைகள் உள்ளன. அந்த உடன்படிக்கைகளே முக்கியமானவை.” – என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசுகர தெரிவித்தார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையில் நேற்றிரவு நடைபெற்ற பங்காளிக்கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்கள் பற்றி விவரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” உரப்பிரச்சினை, யுகதனவி விவகாரம், அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு உட்பட பல விடயங்கள் தொடர்பில் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் எமது நிலைப்பாட்டை அறிவித்தோம். அதன்போது ஆரம்பக்கட்ட உடன்படிக்கையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இன்னும் 2 உடன்படிக்கைகள் உள்ளன. அவையே முக்கியமானவை. எனவே, தேவையான யோசனைகளை முன்வைக்குமாறு நிதி அமைச்சர் எமக்கு தெரியப்படுத்தினார்.” – என்றார் தயாசிறி ஜயசேகர.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
32 5
இலங்கைசெய்திகள்

தேசிய மக்கள் சக்தியினை விட்டு வெளியேறுவதாக யாழ். உறுப்பினர் பகிரங்க அறிவிப்பு

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த, தேசிய மக்கள் சக்தியின் அடிப்படை உறுப்பினர் ஒருவர் தனது பதவியில் இருந்து விலகுவதாக...

31 5
இலங்கைசெய்திகள்

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (16) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, அமெரிக்க டொலரின்...

6 19
இலங்கைசெய்திகள்

முற்றாக முடங்கி போன உப்பு உற்பத்தி

2025ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் உப்பு உற்பத்தி முற்றாக முடங்கிப் போயுள்ளதாக உப்புக்கூட்டுத்தாபன தலைவர் நந்தனதிலக...

19 12
இலங்கைசெய்திகள்

உப்பு இறக்குமதிக்கு அமைச்சரவையின் விசேட அனுமதி

நாட்டில் நிலவும் உப்புத்தட்டுப்பாட்டை நீக்கும் வகையில் உப்பு இறக்குமதிக்கான விசேட அனுமதியொன்றை அமைச்சரவை வழங்கியுள்ளது. அதன்...