Udaya kammanpila.jpg
செய்திகள்அரசியல்இலங்கை

கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியல்வாதி!

Share

அமைச்சர் உதய கம்மன்பில சந்தர்ப்பவாத அரசியலை நடத்துகின்றார் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ குட்டியாராச்சி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மின்நெருக்கடி தொடர்பில் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவும், எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேயும் பொறுப்புகூறவேண்டும். இதனை மறந்து இருவரும் ஒருவர்மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்துக்கொண்டிருப்பதில் பயன் இல்லை.

மின்வெட்டு அமுல்படுத்தப்படுமானால் எந்த பகுதி மற்றும் நேர விவரம் உரிய வகையில் அறிவிக்கப்பட வேண்டும் என நாம் திட்டவட்டமாக அறிவித்துள்ளோம்.

அதேவேளை, உதய கம்மன்பில என்பவர் எதிர்கால இலக்குடன் அரசியல் நடத்துபவர். அரசின் நல்ல திட்டங்களுக்கு உரிமை கோரும் அவர் ,பிரச்சினைகள் வரும்போது நழுவிவிடுவார். தற்போதைய நெருக்கடி நிலைக்கு கொரோனா மட்டும் காரணம் அல்ல என அவர் கூறுவது சந்தர்ப்பவாத அரசியலின் வெளிப்பாடாகும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FeEKtDKWyXj0ebdxP7pcx
செய்திகள்உலகம்

வரலாற்று வெற்றி: அமெரிக்காவிடமிருந்து மீட்கப்படும் 3 பழைமைவாய்ந்த சோழர் காலச் சிலைகள்!

தமிழகத்தின் பல்வேறு ஆலயங்களில் இருந்து திருடப்பட்டு அமெரிக்காவிற்குக் கடத்தப்பட்ட மிகவும் பழைமைவாய்ந்த மூன்று சோழர் காலச்...

image 3a35841713
செய்திகள்இலங்கை

இலங்கையின் சுகாதாரத் துறையில் புதிய திருப்பம்: அனைத்துத் தொழிற்சங்கங்களும் ஒரே குழுவாக ஒன்றிணைந்து செயற்பட இணக்கம்!

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபைக்கும் அனைத்து சுகாதார தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று...

rajith
செய்திகள்இலங்கை

ராஜித சேனாரத்ன மீதான ஊழல் வழக்கு: விசாரணையின் முன்னேற்ற அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு!

மீன்பிடித் துறைமுக மணல் அகழ்வுத் திட்டத்தில் அரசாங்கத்திற்குப் பாரிய நட்டத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் வழக்குத்...

images 1 8
செய்திகள்இலங்கை

சதொச வெள்ளைப்பூண்டு மோசடி: முன்னாள் விநியோக முகாமையாளர் உட்பட 3 பேர் கைது – பிணையில் விடுதலை!

2021 ஆம் ஆண்டு லங்கா சதொச நிறுவனத்தின் வெள்ளைப்பூண்டு கையிருப்பினை விற்பனை செய்ததில் அரசாங்கத்திற்கு 17...