University of Jaffnadd
செய்திகள்இலங்கை

யாழ். பல்கலை 35 ஆவது பட்டமளிப்பு விழா!

Share

யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 திகதி நிகழ்நிலையினூடாக நடைபெறும்.

இவ்வாறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குழுத்தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் அறிவித்துள்ளார்.

பட்டமளிப்புவிழா தொடர்பான தீர்மானகளை மேற்கொள்வதற்கென நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் விசேட கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7,8,9 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்,

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ந்து நீடிக்குமெனின் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையினூடாக நடத்தப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்த சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுமதிக்காத நிலையில் நிகழ்நிலையூடாக பட்டமளிப்பு விழாவை நடத்தி மாணவர்களுக்கான பட்டங்களை உறுதிப்படுத்த பல்கலை நிர்வாகம் முடிவுசெய்திருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நிகழ்நிலைப் பட்டமளிப்புக்கு தாம் இணங்கவில்லை என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று (22) பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

கூட்டத்தின் முடிவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டமளிப்பை நடத்தி பட்டங்கள் உறுதிசெய்யப்படும்,

தற்போதைய நிலைமை சீரடைந்ததும் மரபுரீதியாக நடைபெறும் பட்டமளிப்பு வைபவத்தை நடத்துவதற்கான திகதியை முன்மொழிவதற்கென மாணவர் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அலுவலர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 29
இலங்கைசெய்திகள்

தமிழர் பகுதியில் இருந்து தென்னிலங்கை சென்ற பேருந்து கோர விபத்து – ஒருவர் பலி – பலர் காயம்

கொழும்பு-வெல்லவாய பிரதான வீதியின் வெலியார பகுதியில் மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

9 28
இலங்கைசெய்திகள்

யாழில் பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை உயிர்மாய்ப்பு

யாழ்ப்பாணத்தில், பிள்ளைகளுக்கு திருமணமாகவில்லை என்ற விரக்தியில் தந்தை ஒருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். சங்கானை...

8 30
இலங்கைசெய்திகள்

11 மாணவர்களை தாக்கி காயப்படுத்திய பௌத்த துறவிக்கு பிணை அனுமதி

11 மாணவர்களை பிரம்பால் தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாடசாலை முதல்வரான பௌத்த...

6 31
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு சுற்றுலா செல்லும் தமது நாட்டவருக்கு பிரித்தானியா விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கைக்கு சுற்றுலாவை மேற்கொள்ளும், தமது நாட்டவர்களுக்கு, பிரித்தானியா, நோய் அபாயத்துடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட பயண எச்சரிக்கையை...