University of Jaffnadd
செய்திகள்இலங்கை

யாழ். பல்கலை 35 ஆவது பட்டமளிப்பு விழா!

Share

யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 திகதி நிகழ்நிலையினூடாக நடைபெறும்.

இவ்வாறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குழுத்தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் அறிவித்துள்ளார்.

பட்டமளிப்புவிழா தொடர்பான தீர்மானகளை மேற்கொள்வதற்கென நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் விசேட கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7,8,9 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்,

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ந்து நீடிக்குமெனின் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையினூடாக நடத்தப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்த சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுமதிக்காத நிலையில் நிகழ்நிலையூடாக பட்டமளிப்பு விழாவை நடத்தி மாணவர்களுக்கான பட்டங்களை உறுதிப்படுத்த பல்கலை நிர்வாகம் முடிவுசெய்திருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நிகழ்நிலைப் பட்டமளிப்புக்கு தாம் இணங்கவில்லை என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று (22) பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

கூட்டத்தின் முடிவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டமளிப்பை நடத்தி பட்டங்கள் உறுதிசெய்யப்படும்,

தற்போதைய நிலைமை சீரடைந்ததும் மரபுரீதியாக நடைபெறும் பட்டமளிப்பு வைபவத்தை நடத்துவதற்கான திகதியை முன்மொழிவதற்கென மாணவர் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அலுவலர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 11
இலங்கைசெய்திகள்

அடுத்தவருடம் வெள்ளவத்தையில் நினைவேந்தல் செய்தால் யுத்தம் வெடிக்கும் : தேரர் எச்சரிக்கை

வெள்ளவத்தையில் நினைவேந்தலை அடுத்த வருடமும் அனுஸ்டிக்க விடாதீர்கள். அவ்வாறு நினைவேந்தல் செய்தால் மீண்டும் ஒரு யுத்தம்...

23 13
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியை சந்திக்க வேண்டுமென கூறி குழப்பம் விளைவித்த நபர் கைது

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க வேண்டுமெனக் கூறி குழப்பம் விளைவித்த நபர் ஒருவரை பொலிஸார் கைது...

24 13
இலங்கைசெய்திகள்

சுவிஸ் பெண் உட்பட 2 வெளிநாட்டவர்களின் உயிரை காப்பாற்றிய அதிகாரிகள்

மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில்...

22 14
இலங்கைசெய்திகள்

அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படும்...