University of Jaffnadd
செய்திகள்இலங்கை

யாழ். பல்கலை 35 ஆவது பட்டமளிப்பு விழா!

Share

யாழ். பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 07 திகதி நிகழ்நிலையினூடாக நடைபெறும்.

இவ்வாறு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா குழுத்தலைவரும், கலைப் பீடாதிபதியுமான கலாநிதி கே.சுதாகர் அறிவித்துள்ளார்.

பட்டமளிப்புவிழா தொடர்பான தீர்மானகளை மேற்கொள்வதற்கென நேற்று இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவின் விசேட கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களுக்கு தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

35 ஆவது பட்டமளிப்பு விழாவின் 2ஆவது பகுதி எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7,8,9 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறும்,

நாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ந்து நீடிக்குமெனின் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையினூடாக நடத்தப்படும் என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது.

பட்டமளிப்பு விழாவை நேரடியாக நடத்த சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுமதிக்காத நிலையில் நிகழ்நிலையூடாக பட்டமளிப்பு விழாவை நடத்தி மாணவர்களுக்கான பட்டங்களை உறுதிப்படுத்த பல்கலை நிர்வாகம் முடிவுசெய்திருந்தது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் நிகழ்நிலைப் பட்டமளிப்புக்கு தாம் இணங்கவில்லை என பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் துணைவேந்தரின் கவனத்துக்கு கொண்டு சென்ற நிலையில் நேற்று (22) பட்டமளிப்பு விழாக்குழுவின் விசேட கூட்டம் கூட்டப்பட்டிருந்தது.

கூட்டத்தின் முடிவில் எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 7 ஆம் திகதி நிகழ்நிலையில் பட்டமளிப்பை நடத்தி பட்டங்கள் உறுதிசெய்யப்படும்,

தற்போதைய நிலைமை சீரடைந்ததும் மரபுரீதியாக நடைபெறும் பட்டமளிப்பு வைபவத்தை நடத்துவதற்கான திகதியை முன்மொழிவதற்கென மாணவர் பிரதிநிதிகள், பல்கலைக்கழக அலுவலர்களை கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது – என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Ranil UNP
செய்திகள்அரசியல்இலங்கை

சிறிகொத்தவில் டிஜிட்டல் புரட்சி: ஸ்டார்லிங்க் வசதி மற்றும் UNP செயலியுடன் களமிறங்கும் ஐக்கிய தேசியக் கட்சி!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) தனது அரசியல் கட்டமைப்பை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் நோக்கில், ஒரு...

Weather Forecast Oct 11 2025
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டின் பல பகுதிகளில் மழை: சில இடங்களில் 50 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்!

நாட்டின் பல மாகாணங்களில் இன்றும் மழை பெய்யக்கூடிய வானிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவிப்பு விடுத்துள்ளது....

NAMAL
செய்திகள்அரசியல்இலங்கை

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் நாமல் ராஜபக்ச: வாக்குமூலம் அளிக்க நேரில் முன்னிலை!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சற்று முன்னர்...

PSX 20260202 191816
செய்திகள்அரசியல்இலங்கை

எனக்கும் கெஹெல்பத்தர பத்மேவுக்கும் தொடர்பில்லை! – CID விசாரணையில் பிரசன்ன ரணதுங்க விளக்கம்.

திட்டமிட்ட குற்றச்செயல்களை வழிநடத்தியதாகக் கருதப்படும் ‘கெஹெல்பத்தர பத்மே’ தொடர்பான விசாரணைகளுக்காக, முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...