e65c08bd652f5870b0a7c15f80a13a37 XL
செய்திகள்அரசியல்இலங்கைபிராந்தியம்

இலங்கை போக்குவரத்து சபைக்கு செக் வைத்த யாழ் முதல்வர்!!

Share

இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று வெளியிட்ட மாநகர முதல்வரின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

1.தனியார் பேருந்து சேவையின் உள்ளூர், வெளியூர் சேவைகள், கொழும்பிற்கான இரவு நேர சேவைகள் நீண்ட தூர பஸ் நிலையத்தில் இருந்து எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும்

2.தனியாரின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அதேபோல் வெளி இடங்களிலிருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கப்படுவார்கள் என்றும்

3.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரசந்தியை அடைந்து அங்கிருந்து கேகேஎஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளி மாவட்டங்களுக்கான பயணத்தை மேற்கொள்ளும்

வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் அதே பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்கு முறைஉடனடியாக நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்றும்

4.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படி சந்திக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு அறியத் தருவதாக  குறித்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

WhatsApp Image 2021 12 09 at 6.56.49 PM

 

#SriLanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...