accident 8 750x375 1
செய்திகள்இலங்கை

யாழ். வாகன விபத்தில் முதியவர் பலி !

Share

பால் விற்பனையில் ஈடுபட்டு முடித்து, வீடு திரும்பிய முதியவரொருவர் வீட்டு வாசலின் முன்பு இடம்பெற்ற வாகன விபத்தில் பலியாகியுள்ளார்.

இச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது .

யாழ்ப்பாணம் பொம்மை வெளியை சேர்ந்த 67 வயதான சின்னத்தம்பி சாந்தகுணமூர்த்தி எனும் நபரே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் பால் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் குறித்த நபர் வழமைபோன்று நேற்றைய தினமும் (12) பால் வியாபாரத்தில் ஈடுபட்டு முடித்த பின்னர் வீடு திரும்பியுள்ளார். இதன்போது வீட்டு வாசலின் முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வேளை யாழ்ப்பாணத்தை நோக்கி அராலியில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளார் .

முதியவரை விபத்திலிருந்து மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது முதியவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் .

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 12
உலகம்செய்திகள்

தமிழின அழிப்பை மறுப்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை! பிரம்டன் மேயர் ஆவேசப் பேச்சு

இலங்கையில் தமிழர்கள் இனவழிப்பு செய்யப்படவில்லை என்பவர்களுக்கு கனடாவில் இடமில்லை என பிரம்டன் முதல்வர் பட்ரிக் பிரவுண்...

12 13
இலங்கைசெய்திகள்

இந்திய – பாகிஸ்தான் போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து இலங்கையின் நிலைப்பாடு

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பாராட்டி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க...

11 12
இலங்கைசெய்திகள்

சிங்கள நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நடிகை செமினி இதமல்கொடவிற்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு...

10 15
இலங்கைசெய்திகள்

இறம்பொடை பேருந்து விபத்துக்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

கொத்மலை கரண்டியெல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்துக்கான காரணம் சாரதியின் அலட்சியமா அல்லது பேருந்தின் தொழில்நுட்பக்...