Screenshot 20210512 205011 Facebook
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேசிய தரப்படுத்தலில் யாழ் மாவட்டம் முதலாம் இடம்!

Share

யாழ் மாவட்ட செயலகம் 2020 ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டியில் முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

அத்தோடு பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றியீட்டியுள்ளன.

பொதுமக்கள் சேவை வழங்கலில் சிறந்து விளங்கியமைக்கான அங்கீகாரமாக இதனை கருதுவதாக மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

இனிவரும் காலங்களிலும் அரச திணைக்களங்கள் வினைத்திறனாக சேவையாற்றும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளை இப்போட்டித் தொடரில் கடந்த 2016 ஆம் ஆண்டு 3 ஆம் இடத்தையும், 2018 ஆம் ஆண்டு 2 ஆவது இடத்தையும் யாழ் மாவட்ட செயலகம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...