யாழ்.நீதிமன்று தடையுத்தரவு scaled
செய்திகள்இலங்கை

திலீபனின் நினைவேந்தலுக்கு யாழ்.நீதிமன்று தடை

Share

தமிழின விடுதலைக்காக தன்னுயிரை தியாகம் செய்த தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

நேற்று பிற்பகல் இந்தத் தடை உத்தரவு பொலிஸாரால் பெறப்பட்டுள்ளது.

நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபலின் நினைவிடத்தில் 34வது ஆண்டு நினைவேந்தல் எதிர்வரும் 26ம் திகதிவரை நடத்த ஏற்படாசெய்யப்பட்டது.

இந்நிலையில் நிகழ்வுக்கு தடை விதித்து உத்தரவிடுமாறு யாழ்.தலைமையகப் பொலிஸாரால் நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் திலீபனை நினைவுகூர மற்றும் நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நாட்டில் நிலவும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு அமைய நிகழ்வுகளை நடத்த முடியாது எனவும் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு தடை விதிக்க வேண்டும் எனவும் மன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்ற யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் இந்த தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 10
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் ஈரானின் புதிய வரைபடம்: கடல் எல்லைக் கட்டுப்பாட்டை விரிவுபடுத்துகிறதா ஐ.ஆர்.ஜி.சி?

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), தனது கடற்படையின் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள ஹோர்முஸ்...

world 9
செய்திகள்உலகம்

வியட்நாம் ஜனாதிபதி டோ லாம் எதிர்வரும் 7ஆம் திகதி இலங்கைக்கு அரசமுறைப் பயணம்!

வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (To...

world 8
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் ஜலசந்தியில் பதற்றம்: அமெரிக்கப் போர்க்கப்பல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்!

ஹோர்முஸ் ஜலசந்திக்குள் (Strait of Hormuz) நுழைய முயன்ற எதிரிப் போர்க்கப்பல்களை “விரைவான மற்றும் தீர்க்கமான...

world 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வாட்ஸ்அப் காணொளி அழைப்பு மோசடி: இலங்கையர்களுக்கு கணினி அவசரகால ஆயத்தக் குழு எச்சரிக்கை!

இலங்கையர்களை இலக்கு வைத்து வாட்ஸ்அப் (WhatsApp) தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் புதிய வகை காணொளி அழைப்பு...