ffbd4b75 dead
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். கடற்கரைகளில் தொடர்ந்து கரையொதுங்கும் சடலங்கள்!

Share

யாழ்ப்பாணத்தின் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் இரண்டு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

பருத்தித்துறை சக்கோட்டை கடற்கரை மற்றும் மருதங்கேணி கிழக்கு சுண்டிக்குளம் கடற்கரை பகுதிகளில் இரு சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

யாழ்ப்பாணம் மாவட்ட கடற்கரையோரங்களில் அண்மைக்காலமாக தொடர்ந்து சடலங்கள் கரையொதுங்கி வருகின்றன.

இந்த நிலையில், இன்றைய தினம் கரையொதுங்கிய இரு சடலங்களுடன் , கடந்த 6 நாட்களுக்குள் 6 சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கரையொதுங்கிய தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் தெரியாத நிலையில் சடலங்கள் அடையாளம் காணப்படாத நிலையில் உள்ளன.

இதேவேளை, வடமராட்சி மணற்காடு மற்றும் வல்வெட்டித்துறை கடற்கரை பகுதிகளில் கடந்த சனிக்கிழமை இரு சடலங்களும் , நெடுந்தீவு கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு சடலமும், மருதங்கேணி கடற்கரை பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சடலமும் கரையொதுங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...