Kehaliya Rambukwella
செய்திகள்இலங்கை

ஆசிரியர்களின் போராட்டம் வைரஸை பரப்பும் முயற்சியா?

Share

அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம்.

இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கெதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலுக்கு விலை கொடுத்துள்ளன. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை – என்றார்.

இதேவேளை, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட் பரவல் நிலைமையில் சுகாதார வழிகாட்டல்களை மீறி போராட்டங்களை முன்னெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் . நாட்டில் தொற்று நோய் நிலமை இன்னும் சீராகவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை மனித உரிமையின் கடுமையான மீறல் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையிலே நாட்டில் தொற்று நோய் காலத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்தையும் நாங்கள் ஏற்கப்போவதுமில்லை மன்னிக்கப்போவதுமில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
10 19
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அடுத்தடுத்த விபத்துக்களால் அதிகரிக்கும் உயிரிழப்புகள் – எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

இலங்கை நீண்ட தூர சேவை பேருந்துகளில் சிறப்பு ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கும்,...

9 19
இலங்கைசெய்திகள்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க...

8 19
இலங்கைசெய்திகள்

நாட்டை மீட்க அனைவரும் கைகோருங்கள்.. எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்க அனைவரும் கைகோர்க்க வேண்டும். இதில் அரசாங்கம், எதிர்த்தரப்பு மற்றும்...

7 19
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத மருந்து இறக்குமதி தொடர்பில் சிறப்பு விசாரணை

அரசாங்கத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் இழப்பை ஏற்படுத்திய மற்றும் நோயாளிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய ஹியூமன் இம்யூனோகுளோபுலின்...