Kehaliya Rambukwella
செய்திகள்இலங்கை

ஆசிரியர்களின் போராட்டம் வைரஸை பரப்பும் முயற்சியா?

Share

அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம்.

இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கெதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலுக்கு விலை கொடுத்துள்ளன. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை – என்றார்.

இதேவேளை, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட் பரவல் நிலைமையில் சுகாதார வழிகாட்டல்களை மீறி போராட்டங்களை முன்னெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் . நாட்டில் தொற்று நோய் நிலமை இன்னும் சீராகவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை மனித உரிமையின் கடுமையான மீறல் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையிலே நாட்டில் தொற்று நோய் காலத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்தையும் நாங்கள் ஏற்கப்போவதுமில்லை மன்னிக்கப்போவதுமில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...