Kehaliya Rambukwella
செய்திகள்இலங்கை

ஆசிரியர்களின் போராட்டம் வைரஸை பரப்பும் முயற்சியா?

Share

அண்மைக்காலமாக நாட்டில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்கள் கொவிட் வைரஸை பரப்புவதற்கான ஓர் முயற்சியாக இருக்கலாம்.

இவ்வாறு சுகாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசுக்கெதிரான போராட்டங்கள் வைரஸ் பரவலுக்கு விலை கொடுத்துள்ளன. நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் அதிபர், ஆசிரியர்கள், முன்னுதாரணமாக விளங்க வேண்டும். ஆனால் அவர்கள் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை – என்றார்.

இதேவேளை, கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாளைய தினம் முன்னெடுக்கவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சர் தெரிவிக்கையில்,

நாட்டில் கோவிட் பரவல் நிலைமையில் சுகாதார வழிகாட்டல்களை மீறி போராட்டங்களை முன்னெடுக்க நாம் அனுமதிக்கமாட்டோம் . நாட்டில் தொற்று நோய் நிலமை இன்னும் சீராகவில்லை. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டத்தை முன்னெடுப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்.

ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கான அடிப்படை மனித உரிமையின் கடுமையான மீறல் ஆர்ப்பாட்டம். தொழிற்சங்க உரிமைகள் மற்றும் பேச்சு சுதந்திரம் என்ற போர்வையிலே நாட்டில் தொற்று நோய் காலத்தில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு போராட்டத்தையும் நாங்கள் ஏற்கப்போவதுமில்லை மன்னிக்கப்போவதுமில்லை – எனவும் தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...