Shavendra Silva
செய்திகள்அரசியல்இலங்கை

முடக்கப்படுகிறதா நாடு!!!!

Share

கொரோனாவின் புதிய திரிபான ஒமிக்ரோன் தொற்று நாட்டில் பரவாமல் இருப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார தரப்பினர் மேற்கொண்டுள்ளதாக கொவிட் தடுப்புச் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எதிர்காலத்தில் பயணக்கட்டப்பாடு விதிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்ட போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் மேலும்;

புதிய மாறுபாடு குறித்து வல்லுனர்கள் மாறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதாகவும், அது தொடர்பில் முழுமையாக பகுப்பாய்வுக்கு உட்படுத்திய பின்னர் அதன் பாதுகாப்புக் குறித்து தெரியப்படுத்துவார்கள்.

தற்போது மக்கள் சுதந்திரமாக நடமாடத் தொடங்கி விட்டனர். மக்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...