ஐ.பி.எல். போட்டி – ரசிகர்களுக்கு அனுமதி

ipl starts from september 19 555

இம் மாதம் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராச்சியத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டிகளை நேரில் கண்டுகளிக்க ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி மைதானத்துக்குள் சென்று போட்டிகளை பார்வையிட முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுத்தல் காரணமாக இந்தியாவில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகள் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில் எஞ்சியுள்ள போட்டிகளை எதிர்வரும் 19 ஆம் திகதி ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என ஐ.பி.எல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் போட்டிகளை பார்வையிட ரசிகர்கள் இணையத்தளத்தில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version