makintha
செய்திகள்இலங்கை

சர்வதேச சைகை மொழி தினம் – பிரதமர் வாழ்த்து!

Share

இன்று சர்வதேச சைகைமொழி தினமாகும். உலகம் முழுவதும் இத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத் தினத்தையொட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ச செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை மொழி பயன்பாட்டளர்களுக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ள செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரைப் போன்று உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை பிரதமர் இந்நாளில் நினைவூட்டினார்.

சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் – என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...

7003785 rain
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

மழை நீடிக்கும்: 5 மாவட்டங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் அடுத்த 36 மணித்தியாலங்களுக்குப் பலத்த மழை மற்றும் காற்று வீசக்கூடும் என...

7003785 rain
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மகாவலி கங்கை பெருக்கெடுப்பு: 8 பிரதேசங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை; சோமாவதிய யாத்திரையைத் தவிர்க்குமாறு கோரிக்கை!

மகாவலி கங்கை ஆற்றுப் படுக்கையின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, அடுத்த...