makintha
செய்திகள்இலங்கை

சர்வதேச சைகை மொழி தினம் – பிரதமர் வாழ்த்து!

Share

இன்று சர்வதேச சைகைமொழி தினமாகும். உலகம் முழுவதும் இத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இத் தினத்தையொட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ச செவிப்புலனற்றவர்கள் மற்றும் சைகை மொழி பயன்பாட்டளர்களுக்கு தனது வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் உள்ள செவிப்புலனற்ற அனைவருக்கும் பிறரைப் போன்று உலகை அறிவதற்கு நாம் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

மேலும் செவிப்புலனற்ற நபர்கள் எவ்வித பாகுபாடும் இன்றி சாதாரணமாக சமூகத்துடன் இணைந்து செயற்படுவதற்கான வலிமையை ஒரு அரசாங்கமாக நாம் தொடர்ச்சியாக ஏற்படுத்திக் கொடுப்போம் என்பதை பிரதமர் இந்நாளில் நினைவூட்டினார்.

சைகை மொழியின் வளர்ச்சிக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் வசதிகளை மேம்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஏனைய மொழிகள் போன்றே சைகை மொழிக்கும் முன்னுரிமை வழங்கி எமது சக குடிமக்களுக்காக தமது கடமைகளை நிறைவேற்றுமாறு பொறுப்புவாய்ந்த அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன் – என்று தன்னுடைய வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...