b1874651 9aa92aa5 52913258 ranil
செய்திகள்அரசியல்இலங்கை

சர்வதேச நாணய நிதிய அறிக்கை – விவாதம் வேண்டும் என்கிறார் ரணில்

Share

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை இம் மாதம் இறுதியில் வெளிவரவுள்ளது. அது தொடர்பில் மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்கப்பட வேண்டும் – என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.

நாடாளுமன்றம் நேற்று பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் தலைமையில் கூடியது. இதன்போதே ரணில் இவ்வாறு வலியுறுத்தினார்.

” சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் நடத்திய பேச்சு தொடர்பான அறிக்கையை பணிப்பாளர் சபை பெப்ரவரி மூன்றாம் வாரத்தில் வெளியிட இருக்கிறது. எனவே அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து எம்.பிகளுக்கு வழங்குமாறு கோருகிறேன்.

அரசின் நிதி குழுவுக்கும் அது குறித்து கவனம் செலுத்த முடியும்.

இதற்கு யார் பொறுப்பு என்று ஆராய்ந்து பயனில்லை. அறிக்கை குறித்து ஆராய்ந்து சில விடயங்கள் குறித்து உடன்பாட்டுக்கு வரலாம். பெப்ரவரி மாதம் இது தொடர்பான அறிக்கையை வழங்கினால் மார்சில் அது பற்றி ஆராய முடியும். தற்போதுள்ள நெருக்கடி நிலைக்கு எங்கிருந்தாவது தீர்வு வழங்க வேண்டும். இங்கு உடன்படும் விடயங்களை ஜனாதிபதிக்கு வழங்கலாம் என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...