WhatsApp Image 2021 08 28 at 11.53.43 1
செய்திகள்இலங்கை

பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்?

Share

பந்துல குணவர்தனவால் சிக்கலில் ஜனாதிபதி, பிரதமர்?

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட பலர் தொற்றுக்குள்ளாக்குவதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பந்துல குணவர்த்தனவின் ஊழியர்கள் பலருக்கு கொரோனாத் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் முதல் தன்னுடன் தொடர்புகளைப் பேணியோர் சுயதனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.

அதேநேரம் நேற்று (27) நடந்த தேசிய கொரோனா தடுப்புச் செயலணிக் கூட்டத்தில் அமைச்சர் பந்துல குணவர்த்தன பங்கேற்றிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர், சுகாதார அமைச்சர், இராணுவத் தளபதி, பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இவர்கள் அனைவரும் அமைச்சருடன் தொடர்புகளைப் பேணிய முதல்நிலைத் தொடர்பாளர்களாக மாறியுள்ளனர். கந்த நிலையிலையிலேயே மேற்படி அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...