sisuuu death
செய்திகள்இலங்கை

பச்சிளம் சிசு புதைப்பு – தாய் கைது!

Share

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வீட்டின் அருகில் புதைப்பட்ட சிசு ஒன்றின் சடலம்  தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதமேயான குறை பிரசவத்தில் பிரசவித்த சிசுவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் திருமணம் செய்யாத 25 வயதுடைய பெண் கருவுற்ற நிலையில் வீட்டாரின்  நிர்ப்பந்தத்தில் வீட்டிலேயே கருக்கலைப்பு இடம்பெற்று சிசுவை பிரசவித்துள்ளார்.

குறித்து சிசுவை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். சிசுவின் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு குறித்த யுவதி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு பொலிஸார் யுவதியின் வாக்குமூலத்தை பதிவுசெய்து நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.

இதன்போது நீதிவான் குழந்தையை பிரசவித்த தாய்க்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...