sisuuu death
செய்திகள்இலங்கை

பச்சிளம் சிசு புதைப்பு – தாய் கைது!

Share

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வீட்டின் அருகில் புதைப்பட்ட சிசு ஒன்றின் சடலம்  தோண்டியெடுக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதமேயான குறை பிரசவத்தில் பிரசவித்த சிசுவே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்ட நீதவானின் உத்தரவுக்கு அமைய பொலிஸார் நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் திருமணம் செய்யாத 25 வயதுடைய பெண் கருவுற்ற நிலையில் வீட்டாரின்  நிர்ப்பந்தத்தில் வீட்டிலேயே கருக்கலைப்பு இடம்பெற்று சிசுவை பிரசவித்துள்ளார்.

குறித்து சிசுவை வீட்டின் அருகில் புதைத்துள்ளனர். சிசுவின் தாய்க்கு இரத்தப்போக்கு அதிகரித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் இது தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு குறித்த யுவதி நடந்தவற்றை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டு பொலிஸார் யுவதியின் வாக்குமூலத்தை பதிவுசெய்து நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டுசென்றனர்.

இதன்போது நீதிவான் குழந்தையை பிரசவித்த தாய்க்கு பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சையளிக்க உத்தரவிட்டதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேகநபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
25 69149dba7d420
உலகம்செய்திகள்

முதுகலை, முனைவர் பட்ட மாணவர்களுக்கான கல்வி அனுமதி நடைமுறை இலகுபடுத்தப்பட்டது – மாகாண சான்றளிப்பு இனித் தேவையில்லை!

எதிர்வரும் 2026ஆம் ஆண்டு முதல் சர்வதேச மாணவர்கள் கல்வி அனுமதிகளைப் பெறும் முறையை கனடா இலகுவாக்க...

MediaFile 2 2
செய்திகள்இலங்கை

கெஹல்பத்தர பத்மே வாக்குமூலத்தின் அடிப்படையில்: முன்னணி நடிகை ஒருவர் விரைவில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்படலாம்!

கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினர் கெஹல்பத்தர பத்மே வழங்கிய வாக்குமூலத்தின்...

25 69148ab688d8c
செய்திகள்உலகம்

அமெரிக்காவிற்குத் திறமையான தொழிலாளர்கள் தேவை: H-1B விசா கட்டண உயர்வுக்குப் பின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!

தனது நாட்டிற்கு வெளிநாடுகளில் இருக்கும் திறமையான தொழிலாளர்கள் மற்றும் சிறப்புத் திறன்களைக் கொண்டவர்கள் தேவை என...

1747801591 RAMITH 6
இலங்கைசெய்திகள்

நாகரிகமற்ற செயல்: ரூ. 296 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கில் பிணையில் வந்த கெஹெலியவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனும், முன்னாள் தனிப்பட்ட செயலாளருமான ரமித் ரம்புக்வெல்ல, நீதிமன்றத்திற்கு வெளியே...