VideoCapture 20220125 085008 1
செய்திகள்இந்தியாஇலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் விடுதலை!

Share

அண்மையில், இலங்கை கடற்பரப்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 இந்திய மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றினால் இன்றையதினம் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.

கடந்த டிசெம்பர் மாதம் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் கைதான குறித்த மீனவர்கள் தொடர்பில் கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்தால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்றையதினம் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 55 மீனவர்களும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர்.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மீனவர்கள் அனைவருக்கும் ஆறு மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட ஐந்து வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

VideoCapture 20220125 084959 1

இதேவேளை, அவர்களது கைவிரல் அடையாளங்களும் பதிவுசெய்யப்பட்டன. அத்துடன் அவர்களை இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இந்தியாவிற்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதவான் ஜெ.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை, கைதானவர்களில் ஒருவர் அவர்கள் வந்த படகொன்றின் உரிமையாளர் என்பதால் குறித்த நபரின் படகு அரசுடைமையாக்கப்பட்டுள்ளது. ஏனைய 7 படகுகள் தொடர்பான தீர்ப்பு எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
செய்திகள்உலகம்

ஈரான் போர் பதற்றங்களுக்கு மத்தியில்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்காக வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற சிறப்புப் பிரார்த்தனை!

ஈரானுடனான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அந்நாட்டின் பாதுகாப்புப்...

20 6
செய்திகள்உலகம்

பாபா வாங்காவின் உலகப்போர் கணிப்புடன் ஒத்துப் போகிறதா தற்போதைய ஈரான்-இஸ்ரேல் மோதல்? அச்சத்தில் உலக நாடுகள்!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், புகழ்பெற்ற பல்கேரியத் தீர்க்கதரிசி பாபா வாங்கா...

21 6
செய்திகள்உலகம்

ஈரான் கப்பல் மற்றும் பணியாளர்களை மீட்ட இலங்கை: ஐக்கிய நாடுகள் சபை பாராட்டு!

இலங்கை கடற்பரப்பில் அண்மையில் தாக்குதலுக்கு உள்ளான ஈரானியக் கப்பல் மற்றும் அதில் இருந்த பணியாளர்களை மீட்பதற்காக...

24 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அஸ்வெசும பயனாளிகளின் தகவல்கள் புதுப்பிப்பு: மார்ச் 28 வரை கணக்கெடுப்பு பணிகள் தீவிரம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் (2022/2023) விண்ணப்பித்த பயனாளிகள் மற்றும் நன்மைகளைப் பெறாத விண்ணப்பதாரர்கள்...