Andhra Pradesh Murder
இந்தியாசெய்திகள்

கணவனின் தலையை வெட்டியெடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பெண்!!!

Share

கணவனின் கழுத்தறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரப்பிரதேசம்- சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவனை மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் அவரது மனைவி வசுந்தரா (வயது 50).

குறித்த தம்பதியிடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நீடித்ததாகவும், அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனை, மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளதுடன், கணவனின் தலையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரத்தக் கறைகளுடன் குறித்த பெண் செல்வதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதை கண்டறிந்துள்ளனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தம்பதிக்கு 20 வயதில் மகன் உள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...