Andhra Pradesh Murder
இந்தியாசெய்திகள்

கணவனின் தலையை வெட்டியெடுத்து பொலிஸ் நிலையம் சென்ற பெண்!!!

Share

கணவனின் கழுத்தறுத்து மனைவி கொலை செய்த சம்பவம் ஆந்திராவில் இடம்பெற்றுள்ளது.

ஆந்திரப்பிரதேசம்- சித்தூர் மாவட்டத்தில் உள்ள ரேனிகுண்டா கிராமத்தில் குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவனை மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார்.

ரேனிகுண்டா கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (வயது 53) மற்றும் அவரது மனைவி வசுந்தரா (வயது 50).

குறித்த தம்பதியிடையே கடந்த சில நாட்களாக பிரச்சினை நீடித்ததாகவும், அவர்களிடையே வாக்குவாதம் முற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்தநிலையில், வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவனை, மனைவி கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளதுடன், கணவனின் தலையுடன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இரத்தக் கறைகளுடன் குறித்த பெண் செல்வதை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், கொலையாளி மனநலம் பாதிக்கப்பட்ட பெண் என்பதை கண்டறிந்துள்ளனர். அத்துடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த தம்பதிக்கு 20 வயதில் மகன் உள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...