செல்போனை பயன்படுத்தியமைக் கண்டித்தமையால் மாணவி தற்கொலை!!!

suicide

செல்போன் பயன்படுத்தியதை பெற்றோர்கள் கண்டித்தமையால் மாணவி ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள காசிபாளையத்தைச் சேர்ந்த சுதா (வயது 17) என்ற மாணவி அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 படித்து வந்த நிலையில், எந்த நேரமும் செல்போனைப் பயன்படுத்திக் கொண்டே இருந்துள்ளார்.

இதனைப் பெற்றோர்கள் பலமுறை கண்டித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பெற்றோர்கள் குறித்த மாணவியை மீண்டும் கண்டித்துள்ளனர்.

கூலித் தொழிலாளர்களான குறித்த மாணவியின் பெற்றோர்கள், வேலைக்குச் சென்று வீடு திரும்பிப் பார்த்தபோது, வீட்டில் மின்விசிறி மாட்டும் கொக்கியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் இச்சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

#IndiaNews

Exit mobile version