Egg 1
இந்தியாசெய்திகள்

சத்துணவில் பழுதடைந்த முட்டைகள்!!

Share

இந்தியா- தமிழகத்தில் பாடசாலையில் வழங்கப்படும் சத்துணவில் கெட்டுப்போன முட்டைகள் இருந்த விவகாரத்தில் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியை அடுத்த நாகனூர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பாடசாலையில், மாணவர்களுக்கு சத்துணவில் வழங்கப்படும் முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனுடைய அடிப்படையில் கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் இன்று சம்பந்தப்பட்ட பாடசாலைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அங்குள்ள உணவுப் பொருட்கள் மற்றும் இருப்பு உள்ள முட்டைகளின் தரம் ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனைத்து உணவுப் பொருட்களும் நல்ல நிலையில் உள்ளது என்றும், முட்டைகள் தண்ணீரில் இட்டு பரிசோதிக்கப்பட்டதாகவும் அவை அனைத்தும் நல்ல நிலையில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இருப்பினும் கடந்த வாரம் வாங்கப்பட்ட முட்டைகளை உரிய காலத்தில் அளிக்காமல், பழுதடைந்த முட்டைகளை பாடசாலையில் வைத்திருந்தமை கண்டறியப்பட்டது.

இதையடுத்து பாடசாலையின் சத்துணவு அமைப்பாளர் தேன்மொழி, சமையல் பணியாளர் இலட்சுமி மற்றும் பாடசாலைத் தலைமை ஆசிரியை தனலட்சுமி ஆகியோரை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
500x300 20809002 tvkvijay29102025
செய்திகள்இந்தியா

வீட்டுக்கு நிரந்தர வீடு, உந்துருளி: மக்கள் சந்திப்பில் ‘தமிழக வெற்றிக் கழகம்’ தலைவர் விஜய் உறுதி!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பு...

images 2
செய்திகள்இந்தியா

இந்தியத் தொழிலதிபர் மகனின் ஆடம்பரத் திருமணம் இலங்கையில்: சுற்றுலாத் துறைக்கு ரூ.35 மில்லியன் வருவாய் ஈட்டும் என எதிர்பார்ப்பு!

இந்தியாவின் பிரபலத் தொழிலதிபரான மோகன் சுரேஷ் தனது மகன் ஜஹ்ரான் சுரேஷின் திருமணத்தை நடத்த இலங்கையைத்...

pm modi 13 20251119144744
இந்தியாசெய்திகள்

ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்குப் பயணம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்யத் தயாராகி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன....

202002060432067433 Director Gowthaman held for attempt to protest consecration SECVPF
செய்திகள்இந்தியா

திருமலை புத்தர் சிலை விவகாரம்: அநுரகுமார திசாநாயக்க ராஜபக்ச, ரணில் வழியில் பயணிக்கிறாரா? – இயக்குநர் வ.கௌதமன் காட்டம்!

திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்ட பின், அதை மீண்டும் அதே இடத்தில்...