23 649119760c9ca
இந்தியா

றோ உளவின் புதிய தலைவராகும் ரவி சின்ஹா!!

Share

றோ உளவின் புதிய தலைவராகும் ரவி சின்ஹா!!

றோ உளவு அமைப்பின் புதிய தலைவராக ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்காவை இந்திய மத்திய அரசு நியமித்துள்ளது. தற்போது இந்திய மத்திய கேபினட் செயலகத்தில் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்காவை பற்றிய முழு விவரங்களைப் பார்க்கலாம்.

இந்தியாவின் முதன்மை உளவு அமைப்புகளில் ஒன்றான றோ அமைப்பானது உளவு மற்றும் கொள்கை வகுப்பு விவகாரங்களில் முதன்மையானதாக உள்ளது. வெளிநாடுகளில் உளவு பார்க்கும் இந்திய உளவு அமைப்பு ‘ரோ’ வின் தலைவராக உள்ள சமந்த்குமார் கோயல், இம்மாதம் 30ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து, ‘றோ’ அமைப்பின் புதிய தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி ரவி சின்கா நியமிக்கப்பட்டுள்ளார். அவரை 2 ஆண்டுகளுக்கு அப்பதவியில் நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் அளித்து இருக்கிறது. ரவி சின்கா தற்போது அமைச்சரவை செயலகத்தின் சிறப்புச் செயலாளராக இருந்து வருகிறார். ரவி சின்கா 1988ஆம் ஆண்டின் சத்தீஷ்கார் பிரிவைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். ‘ரோ’ அமைப்பில் 20 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை வகித்து இருக்கும் ரவி சின்ஹா, சில வெளிநாடுகளில், சீக்கிய பயங்கரவாதம் தலைதூக்கி வரும் வேளையிலும் மணிப்பூரில் இனவாத மோதல் வெடித்துள்ள இந்த சூழலில் ரவி சின்ஹா இப்பொறுப்பை ஏற்கவுள்ளார்.

தற்போது கேபினட் செயலகத்தில் சிறப்புச் செயலாளராக இருக்கும் ரவி சின்ஹா, ஜம்மு – காஷ்மீர், வடகிழக்கு இந்தியா மற்றும் இடது சாரி தீவிரவாதம் உள்ளிட்ட சென்சிட்டிவ் ஆன விடயங்களை மிகவும் நுணுக்கமாக அறிந்தவர் என்று அறியப்படுகிறார். அதுமட்டும் இன்றி உளவுத்தகவல்களைச் சேகரிப்பதில் நவீன தொழில் நுட்பத்தையும் புகுத்தியவராகப் பார்க்கப்படுகிறார்.

றோ உளவு அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் சமந்த்குமார் கோயல், பாகிஸ்தானில் நடந்த சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் சட்டப்பிரிவு 370ஐ நீக்கிய பிறகு மேற்கொண்ட அமைதி நடவடிக்கை, காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிரான செயல்பாடுகள் எனப் பல்வேறு பணிகளை வெற்றிகரமாக முடித்தவராக அறியப்பட்டார். தற்போது புதிதாக றோ அமைப்பின் தலைவராகப் பொறுப்பேற்க இருக்கும் ரவி சின்ஹாவுக்கும் பல்வேறு சவாலான பணிகள் இருந்தாலும் திறம்படக் கையாள்வார் என்பதில் சந்தேகம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1813540 sabarimala
இந்தியாசெய்திகள்

சபரிமலை மண்டலப் பூஜை: இதுவரை 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்; காட்டுப் பாதையில் புனித யாத்திரை செய்வோரின் எண்ணிக்கையும் உயர்வு!

சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு பருவகாலத்தையொட்டி, கடந்த மாதம் (நவம்பர்) 16ஆம் திகதி நடை...

puthiyathalaimurai 2024 01 760c263d 5433 4158 8378 13068b38fb78 river
இந்தியாசெய்திகள்

புதுடெல்லி கடும் பனிமூட்டம்: 100 விமானங்கள் ரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு!

புதுடெல்லி உட்படப் பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், அதிகாலை மற்றும்...

1763436612 MediaFile 1
இந்தியாசெய்திகள்

அரியானாவில் கடுமையான மூடுபனி: 35+ வாகனங்கள் மோதல் – பலர் படுகாயம்!

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் இன்று காலை வீதிகள் தெரியாத அளவுக்கு அடர்ந்த மூடுபனி சூழ்ந்த காரணத்தினால்,...

kidney 2025 02 64c4dfaad03050762c0097e951e0a6ec 3x2 1
இந்தியாசெய்திகள்

சிறுநீரக செயலிழப்பு: இந்தியாவில் ஆண்டுக்கு 2.5 இலட்சம் பேர் உயிரிழப்பு – 7 கோடி மக்கள் நாள்பட்ட நோயால் அவதி!

இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை இலட்சம் பேர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிப்பதாக அந்நாட்டு ஊடகங்கள்...