8156fbd7 28a9a3b4
இந்தியாசெய்திகள்

மதுரவாயல்: லொறி ஏறி தந்தை கண்முன்னே இரண்டு மகன்களும் உயிரிழப்பு

Share

 

மதுரவாயல் அருகே மோட்டார் சைக்கிளிலிருந்து சாலையில் தவறி விழுந்ததில் அவ்வழியாக வந்த லொறி ஏறி, தந்தை கண்முன்னே இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உறவினர்களை சபரிமலை கோவிலுக்கு வழியனுப்பிவிட்டு வந்தபோது இந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Accident 1 1

ஆவடியை சேர்ந்தவர் செல்வம்(36), டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சுமலதா(29), இவர்களுக்கு ஆதிரன்(4),கவுசிக்(2), மற்றும் ஒரு கைக்குழந்தையும் உள்ளது. இவர்களது உறவினர்கள் இருமுடி அணிந்து சபரி மலைக்கு செல்வதால் மகாலிங்கபுரத்தில் உள்ள கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்று அவர்களை கோவிலுக்கு வழியனுப்பி விட்டு வீட்டிற்கு செல்வதற்காக திரும்பினார்கள்.

இதில் அனைவரும் காரில் வருவதற்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில்  சங்கர் மட்டும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு செல்வதாக கூறியதையடுத்து அவரது இரு பிள்ளைகளும்இ தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் ஏறிக்கொண்டனர். இரண்டு மகன்களையும் செல்வம் மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு சென்று கொண்டிருந்தார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, மதுரவாயல் அருகே சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்று கொண்டிருந்த வாகனத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று பேரும் சாலையில் நிலை தடுமாறி விழுந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த லொறி ஒன்றுஇ செல்வத்தின் மகன்கள் ஆதிரன், கவுசிக் மீது ஏறியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். செல்வத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டதால் வலியாலும் தன் கண் முன்னே இரண்டு மகன்கள் இறந்த போனதை கண்டு கதறி அழுதார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் செல்வத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சிறுவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்துக்கு காரணமான லொறிரைவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் முறையாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் விபத்து குறித்த காட்சிகளும் கேமராவில் பதிவாகவில்லை.

#indianews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
23 64b883bc2cf55
செய்திகள்இலங்கை

வடமேல் மாகாண மக்களுக்கு மகிழ்ச்சிச் செய்தி: ஒரு நாளில் தேசிய அடையாள அட்டை சேவை குருணாகலில் ஆரம்பம்!

வடமேல் மாகாண மக்களின் வசதி கருதி, தேசிய அடையாள அட்டையை ஒரு நாளில் வழங்கும் சேவை...

mcms
உலகம்செய்திகள்

வீரப்பன் தேடுதல் வேட்டை: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹ 2.59 கோடி இழப்பீடு வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது அதிரடிப் படையால் (Special Task Force – STF) பாதிக்கப்பட்ட...

21097036 truck
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் கட்டாய ஆங்கிலத் தேர்வில் தோல்வி: 7,000க்கும் மேற்பட்ட பாரவூர்தி சாரதிகள் பணி நீக்கம்!

அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரவூர்தி சாரதிகளைப் பாதிக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்த ஆண்டு...

539661 trisha mks
செய்திகள்இந்தியா

திரிஷா, விஷால், மணிரத்னம் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: டி.ஜி.பி. அலுவலகத்திற்கு மின்னஞ்சல் – புரளி என உறுதி!

நாடு முழுவதும் அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் மற்றும் முக்கிய நிறுவனங்களுக்குச் சமூக ஊடகங்கள் மூலம்...