Chili Chicken
இந்தியாசெய்திகள்

சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி: 40 பேருக்கு ஏற்பட்ட சிக்கல்!

Share

தமிழ்நாடு – தருமபுரியில் ஊரடங்கை மீறி சிக்கன் சாப்பிடும் போட்டி நடத்திய 40 பேர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் – முக்கல்நாய்க்கன்பட்டி கிராமத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரு கிலோ சில்லி சிக்கன் சாப்பிடும் போட்டி நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரே இடத்தில் பந்தல் அமைத்து, 15 கிலோ சிக்கனை 15 பேருக்கு பரிமாறி போட்டியானது முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் தொற்று அதிகமாகப் பரவிவரும் நிலை காரணமாக ஊரடங்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ட நிலையில், சமூக இடைவெளியின்றி ஒரு கிலோ சில்லி சிக்கனை இளைஞர்கள் அமர்ந்து சாப்பிட்டுள்ளனர்.

அத்துடன், பிரியாணி சாப்பிடும் போட்டியும் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கொவிட்-19 ஊரடங்கு விதிகளை மீறியதாகவும், தொற்று பரவும் வகையில் கூட்டத்தை கூட்டியதாகவும், விழாவின் ஏற்பாடு செய்தவர்கள் மற்றும் போட்டியில் பங்கேற்றவர்கள் உள்ளிட்ட 40 பேர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...